ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்


ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்
x

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 5.18 ஏக்கர் பரப்பளவு கொண்ட மந்தவெளி நிலத்தை அப்பகுதி அ.தி.மு.க.வை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்ரமிப்பு செய்துள்ளார். அதை மீட்டு பள்ளிக்கு வழங்கவும், அப்பகுதியில் மரக்கன்றுகள்‌ நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Related Tags :
Next Story