நண்பரை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


நண்பரை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x

உவரி அருகே நண்பரை கொலை செய்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

உவரி அருகே நண்பரை கொலை செய்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பழைய இரும்பு வியாபாரி

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசிங். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 47), பழைய இரும்பு வியாபாரி.

இவரும், அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்ததால் ஒருவருக்கொருவர் நன்றாக பழகி வந்தனர்.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் செல்வகுமார் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் முத்துகிருஷ்ணன், செல்வகுமாரிடம் நீ உனது மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 15-6-2022 அன்று இரவிலும் முத்து மீண்டும் அறிவுரை கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், முத்துகிருஷ்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை நீதிபதி சீனிவாசன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் கே.சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.


Next Story