புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2023 6:45 PM GMT (Updated: 2 Aug 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

மயிலாடுதுறை


மயிலாடுதுறை கூறைநாடு பூக்கடை தெரு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கும்பகோணம் அருகே பெரும்பாண்டி நேரு நகரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 40) என்பதும், அவர் மயிலாடுதுறை பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களுடன் மொபட்டை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்தனர்.


Next Story