புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று இட்டமொழி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இட்டமொழி பஸ் நிறுத்தம் அருகில் மொபெட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சாத்தான்குளம் ஆலங்கிணறு வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த வேம்படிதுரை (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்கள், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story