புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

சீர்காழியில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசாரை கைது செய்து அவரிடம் இருந்த 450 பாக்ெகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழியில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசாரை கைது செய்து அவரிடம் இருந்த 450 பாக்ெகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

புகார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் (வயது 32). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது.

கைது

இதையடுத்து நேற்று கார்த்திக் கடையை போலீசார் சோதனை செய்தனர். அப்ேபாது விற்பனைக்காக 450 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்த 450 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story