புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 6:45 PM GMT (Updated: 28 Feb 2023 6:45 PM GMT)

கிணத்துக்கடவில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கிணத்துக்கடவு போலீசார், மின்வாரிய அலுவலகம் ரோடு பகுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தினர்.

அங்கு புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக கடைக்காரர் உன்னி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கிணத்துக்கடவு பகுதியில் நான்கு வழிச்சாலையில் கல்லூரி அருகே உள்ள பேக்கரியில் கிணத்துக்கடவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு பீடி, சிகரெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சிகரெட், பீடி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கல்லூரி அருகே விற்பனை செய்ததாக கிணத்துக்கடவு நெம்பர்.10 முத்தூரை சேர்ந்த விஜய் (39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story