சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

பெரம்பலூர்

மதுரகாளியம்மன் கோவில்

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்ரீசண்டி மஞ்சரி ஹோமம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை குருவுக்கு பாதபூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தொடங்கி காலை 11 மணி வரை ஸ்ரீநவாவரண பூஜையும், நவாவரண ஹோமமும் நடக்கிறது.

குங்கும அர்ச்சனை

இதனிடையே காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அகண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்கும அர்ச்சனையும் நடக்கிறது. இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்கின்றனர். விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகாநந்த பரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை தாங்கி சண்டி மஞ்சரி ஹோமத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.


Next Story