இன்று பவுர்ணமி கிரிவலம்

கூடலூர் சிவன்மலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
கூடலூர்
கூடலூர் அருகே நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன்மலையில் மாதந்தோறும் பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமி விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பவுர்ணமி கிரிவல தரிசனம் நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் செல்கின்றனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





