பட்டுக்கோட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம்


பட்டுக்கோட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

பட்டுக்கோட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை நகரியம் துணை மின் நிலைய பகுதியில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவேஎஸ்.பி.எஸ். நகர், மன்னை நகர், வளவன் புரம், மதுக்கூர் ரோடு, கண்டியன் தெரு, மயில்பாளையம், தாலுகா ஆபிஸ், வீட்டு வசதி வாரியம், சின்னையா தெரு, கோர்ட், பழனியப்பன் தெரு, ரெயில்நிலைய சாலை, கரிக்காடு, எஸ்.எம்.எஸ் அவென்யூ, சுண்ணாம்புக் காரதெரு, செட்டி தெரு, போஸ்ட் ஆபீஸ், பெரியகடைத்தெரு, பெரியதெரு, சாமு முதலித் தெரு, ஆஸ்பத்திரி ரோடு, ஆர்.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், நாடியம்மன் கோவில் ரோடு, சிவக்கொல்லை, தங்கவேல் நகர், ஆ.வி. குளத்தெரு, சவுக்கண்டித் தெரு, திரவுபதை அம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, தலையாரி தெரு, கே.ஓ.என். பாளையம், மாதாகோவில் தெரு, அணைக்காடு, பண்ணவயல் ரோடு, பள்ளிகொண்டான், பொன்னவராயன் கோட்டை, முதல்சேரி, சேண்டாகோட்டை, மாளியக்காடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் காசாங்காடு கள்ளிக்காடு, ராசியங்காடு துவரங்குறிச்சி, மன்னாங்காடு, மழவேனிற்காடு. வெண்டாக்கோட்டை பழஞ்சூர் பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் ெதரிவித்துள்ளனர்.


Next Story