தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்...!


தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்...!
x

தமிழகத்தில் இன்று 41 குழந்தைகள் உள்பட 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 179 ஆண்கள், 123 பெண்கள் உள்பட மொத்தம் 302 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 77 பேர், செங்கல்பட்டில் 22 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. அரியலூர், கள்ளக்குறிச்சி, தேனி மற்றும் திருப்பத்தூரில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 41 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 46 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 280 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 346 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story