இன்றைய புகைப்படத் தொகுப்பு (24-07-2022)

வான் மகள் அளித்த நீர் கொடையால் நிலமகள் பச்சை பட்டு உடுத்தி காண்போரை கண் கவரும் வகையில் இருக்கும் அழகுற காட்சி.

இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி புதுவை கடற்கரையில் சுதந்திர போராட்ட தியாகிகள் உருவப்படம் வரையப்படுகிறது.

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள பெரிய அளவிலான செஸ் காயினில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் சதுரங்கம் விளையாடிய போது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கீர்த்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.

தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழிமறைத்த யானைகள்.

தஞ்சையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை ஏராளமான மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்தனர்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ரத்தினகிரி அருகே அம்முண்டியில் இருந்து வடிவேல் முருகன் கோவிலுக்கு 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.

கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
வான் மகள் அளித்த நீர் கொடையால் நிலமகள் பச்சை பட்டு உடுத்தி காண்போரை கண் கவரும் வகையில் இருக்கும் அழகுற காட்சி.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire















