சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு


சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
x

சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

திருச்சி

சமயபுரம்:

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள சுங்கச்சாவடியில் கடந்த மாதம் 31-ந் தேதி வரை காருக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணம் தற்போது ரூ.55 ஆகவும், பஸ்சுக்கு ரூ.165-ல் இருந்து 185 ஆகவும், லாரிக்கு ரூ.265-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. காருக்கு மாதாந்திர கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.1,400-ல் இருந்து ரூ.1,605 ஆகவும், பஸ்சுக்கு ரூ.4,905-ல் இருந்து ரூ.5,620 ஆகவும், லாரிக்கு ரூ.7,880-ல் இருந்து ரூ.9,035 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பழைய கட்டணத்தை விட 15 சதவீதம் கூடுதலாகும். இந்த கட்டண உயர்வினால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்று கருதப்படுகிறது. இதேபோல் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறை அந்த வழியாக பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்க ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும், மாத கட்டணமானது ரூ.1,955-ல் இருந்து ரூ.2,210 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இலகுரக வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறைக்கு ரூ.115-ல் இருந்து ரூ.130 ஆகவும், ஒரு நாளில் பலமுறை செல்வதற்கு ரூ.170-ல் இருந்து ரூ.195 ஆகவும், மாத கட்டணம் ரூ.3,425-ல் இருந்து ரூ.3,870 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி மற்றும் பஸ் செல்வதற்கு ஒரு நாளில் ஒரு முறைக்கு ரூ.230-ல் இருந்து ரூ.260 ஆகவும், ஒருநாளில் பலமுறை சென்று வருவதற்கு ரூ.344-ல் இருந்து ரூ.385 ஆகவும், ஒரு மாத கட்டணம் ரூ.6,845-ல் இருந்து ரூ.7,735 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனம் நாள் ஒன்றுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.365-ல் இருந்து ரூ.415 ஆகவும், பலமுறை சென்று வருவதற்கு ரூ.550-ல் இருந்து ரூ.620 ஆகவும், ஒரு மாதத்திற்கு ரூ.11,005-ல் இருந்து ரூ.12,435 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


Next Story