கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு..!


கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு..!
x

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.110க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் ரூ.20 குறைந்து ரூ.180 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story