அரியலூரில் நாளை நடக்கிறது: மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


அரியலூரில் நாளை நடக்கிறது: மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அரியலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story