காவிரி ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!


காவிரி ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!
x

மேட்டூர் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர்,

மேட்டூர் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், தங்கமாபுரி பட்டினம், மாதையன் குட்டை, நாட்டாமங்கலம், காவேரி கிராஸ் ஆகிய நீர் தேக்கப் பகுதிகளில், கரையின் இருபுறங்களிலும் துர்நாற்றம் வீசி வருகிறது.

தண்ணீர் மாசடைந்து காணப்படுவதால், இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இறந்து போன மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நீர் மாதிரியை சேகரித்து மீன்கள் இறப்புக்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.


Next Story