தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

சுருளி அருவியில் 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள வெண்ணியாறு, மணலாறு, உள்ளிட்ட 7 அணைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது.

சுருளி அருவிக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


Next Story