நெய் அருவியில் சுற்றுலா பயணிகள் மோதல்

செங்கோட்டை அருகே நெய் அருவியில் சுற்றுலா பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை குண்டாறு அணை அருகே நெய் அருவி அமைந்துள்ளது. விடுமுறை நாட்களில் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு இடையே திடீரென மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து நெய் அருவி பகுதியில் போலீசார் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





