குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதேபோல் ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்றும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அருவிக்கரைகளில் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் அருவிகளில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், அவர்கள் வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர். அதன்படி அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர்.

1 More update

Next Story