குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது மழை இல்லாமல் வெயில் அடிக்கிறது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.
நேற்று மெயின் அருவியில் குறைவான அளவே தண்ணீர் விழுந்தது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவியில் ஆண்களைவிட பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





