குளு குளு சீசன்: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


குளு குளு சீசன்: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருவட்டார்,

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகமாக இருந்தது. சாரல் மழையுடன் குளு குளு என காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர்.

கோதையாற்றில் தற்போது மிதமாக தண்ணீர் பாய்வதால் திற்பரப்பு அருவியில் பரவலாக தண்ணீர் விழுகின்றது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் அதிகமாக வருகை தந்த அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றைப்பார்த்து ரசித்தனர். சிறுவர் நீச்சல் குளத்திலும் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்ததின் காரணமாக அருவிப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோன்று நாளை ஞாயிற்றுக்கிழமையான என்பதால் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாபயணிகள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story