கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கோடைவிடுமுறையில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

கோடைவிடுமுறையில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

அதன்படி விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

கடற்கரையில் உற்சாகம்

தொடர்ந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகுத்துறையில் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து படகில் ஏறி சென்றனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை நேரத்தில் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் கடலின் காற்றை உற்சாகமாக அனுபவித்தனர். மேலும் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story