ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

கன்னியாகுமரியில் ஞாயிறு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் ஞாயிறு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் ஞாயிறு விடுமுறையான நேற்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரிய உதயமாகும் காட்சியை பார்க்க சென்றனர். ஆனால் சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை.

களை கட்டியது

பின்னர் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டனர். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.

மேலும் அங்குள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுற்றுலாத்தலம் களை கட்டியது.


Next Story