கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வாரவிடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால் சூரிய உதய காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

வாரவிடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால் சூரிய உதய காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கமான நாட்களை விட அங்கு கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். சூரியன் உதயமாகும் காட்சியை காண ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீண்ட வரிசையில்...

அதைத்தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து ரசித்தனர்.

இதேபோல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்ேத சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் கன்னியாகுமரி களை கட்டியது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story