வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:47 PM GMT)

கடையநல்லூரில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் அசன் அலி (வயது 48). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். தற்போது கடையநல்லூர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே இன்வெர்ட்டர் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து கடன் தொல்லை ஏற்பட்டதால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் மனைவி ஆரிபா பேகம் கடந்த 10-ந்தேதி 2 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எங்கோ சென்று விட்டார். அவரை அசன் அலி உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அசன் அலி கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆரிபா பேகம் மற்றும் 4 குழந்தைகளையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அசன் அலி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story