மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 68). வியாபாரி. சம்பவத்தன்று கிணத்துக்கடவிற்கு வந்த அவர், அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரஞ்சித்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





