கார் மோதி வியாபாரி பலி



கார் மோதி வியாபாரி உயிரிழந்தார்.
மணப்பாறை:
மணப்பாறை காட்டுப்பட்டி முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 48). வியாபாரியான இவர் நேற்று ஒலியமங்களம் சந்தைக்கு பொரி மூட்டையை ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்காலனி அருகே சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire