மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM (Updated: 22 Jun 2023 6:45 PM)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட பாம்பன் விளையை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள சுடலைமாடசாமி கோவில் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் லட்சுமணன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கடைக்கு அருகே வந்தபோது சாலையின் வலது புறமாக மோட்டார் சைக்கிளை திருப்பி உள்ளார். அப்போது பின்னால் ரெஜிஸ் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story