கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில்போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்


கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில்போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்
x
தினத்தந்தி 12 Aug 2023 7:30 PM GMT (Updated: 12 Aug 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் உள்ள அருகே சுங்கச்சாவடி வழியாக பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன. அதேபோல் கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு வருகின்றன. விடுமுறை நாட்களில் இந்த சுங்க சாவடியில் வழக்கத்திற்கு மாறாக வாகனங்களை அதிகமாக வரும் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். நேற்று (சனிக்கிழமை) மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதாலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா என்பதாலும் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கார்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று காலை சென்றனர்.

இதனால் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமம் அடைந்தனர்.


Next Story