லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் முறிந்து விழுந்த மரக்கிளைகள்; போக்குவரத்து பாதிப்பு


லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் முறிந்து விழுந்த மரக்கிளைகள்; போக்குவரத்து பாதிப்பு
x

பலத்த காற்றுடன் பெய்த மழையால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

தேனி

தமிழக-கேரள எல்லை பகுதிகளான கூடலூர், லோயர்கேம்ப், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. குறிப்பாக மாதா கோவில் அருகே பெரிய மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.

இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, தொழிலாளர்கள் மூலம் மலைப்பாதையில் விழுந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. மரக்கிளைகள் முறிந்து விழுந்தபோது வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story