மதுரையில் சோகம்: கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை


மதுரையில் சோகம்: கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
x

மதுரையில் கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்

மதுரை


மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி மெயின் ரோடு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது 36). இவர் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் இலை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பிரேமலதா (26). இந்த தம்பதியருக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.

சிவபிரகாஷ் தொழிலை விரிவுப்படுத்தவும், குடும்ப செலவுக்காகவும் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவரை தொந்தரவு செய்ய தொடங்கினார்கள். இதனால் சிவபிரகாஷ் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று மதியம் சிவபிரகாசும், அவருடைய மனைவி பிரேமலதாவும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் செல்லூர் போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story