பொள்ளாச்சி அருகே பரிதாபம்:மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு


பொள்ளாச்சி அருகே பரிதாபம்:மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

பெயிண்டர்

பொள்ளாச்சி அருகே உள்ள ரவி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 24). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவர் சபரீஸ்வரன் என்பவருடன் நந்தனார் காலனியில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு, இருவரும் தனி, தனி மோட்டார் சைக்கிளில் கொள்ளுப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். விநாயகா கார்டன் பகுதியில் சென்ற போது சின்னாம்பாளையம் வாய்க்கால் அருகில் மோட்டார் சைக்கிளில் இருந்து மணிகண்டன் நிலைதடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதையடுத்து பின்னால் வந்த சபரீஸ்வரன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story