கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன்-தேர்வு முடிவடைந்ததை கொண்டாட குளிக்க சென்ற போது விபரீதம்


கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன்-தேர்வு முடிவடைந்ததை கொண்டாட குளிக்க சென்ற போது விபரீதம்
x

மாமல்லபுரம் அருகே தேர்வு முடிவடைந்ததை கொண்டாட நண்பர்களுடன் குளிக்க சென்ற போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் மாயம்.

செங்கல்பட்டு


செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று பத்தாம் வகுப்பு கடைசி தேர்வு எழுதி முடித்த உடன் அதை கொண்டாடும் விதமாக தன் நண்பர்கள் மவுரி, தமிழ்ச்செல்வன் மற்றும் சிலருடன் மாமல்லபுரம் சென்று கடலில் குளித்துள்ளார்.

அப்போது அலையில் சிக்கி பன்னீர்செல்வம் கடலினுள் இழுத்து செல்லப்பட்டார். அப்போது அருகில் நின்று குளித்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை.உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மாயமான பன்னீர்செல்வத்தை கடலில் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story