செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது


செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது

ஈரோடு

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயிலில் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து ரெயிலில் இருந்த நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி அதை லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்படும். பின்னர் இந்த அரிசி ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story