ரெயில் மோதி மூதாட்டி பலி


ரெயில் மோதி மூதாட்டி பலி
x

ரெயில் மோதி மூதாட்டி பலியானார்

திருச்சி

திருச்சி, ஜூன்.4-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சுந்தரம்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையாபிள்ளை. இவருடைய மனைவி சத்தியபாமா (வயது 87). இவர் நேற்று காலை தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். இந்தநிலையில் அவர் திருச்சி ஜங்ஷன்-குமாரமங்கலம் இடையே ரெயில் தண்டவாளத்தை கடந்து உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரெயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story