ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

பாபநாசம் அருகே ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்
பாபநாசம்;
கோவையை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 62). இவர் பாபநாசம் தாலுகா அன்னப்பன் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வாடகைக்கு குடியிருந்து மிக்ஸி கிரைண்டர் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இருதய ராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக பாபநாசம்- தஞ்சை இடையே திட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற விரைவு ரயில் முன்பு பாய்ந்தாா். இதில் படுகாயமடைந்த இருதயராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து அவருடைய மனைவி சலேத் மேரி கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை ரெயில்வே போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






