ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

ஆடுதுறை அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழந்தார்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மேலமருத்துவக்குடி பட்டவெளி தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது65). இவர் ஆடுதுறை அருகே நேற்று இரவு தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த ெரயில் ரெங்கசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





