ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா


ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா
x

ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 பேருக்கு உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி ஆகியவை 45 நாட்கள் வழங்கப்பட்டன. பயிற்சி காலம் முடிந்து அவர்கள் பணிக்கு செல்ல உள்ள நிலையில் பயிற்சி நிறைவு விழா அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் போலீசாருடன் இணைந்து நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம், அரியலூர் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story