மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி


மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 8 May 2023 1:15 AM IST (Updated: 8 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பள்ளி அதிகாரி அஜய் பரதன் உத்தரவின் பேரில் கமாண்டர் ராஜேஸ்குமார், துணை கமாண்டர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 8 பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து 60 வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகளை அளித்தனர். மழை வெள்ள காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் முதலுதவி சிகிச்சை, டிரம், கேன் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மைய பகுதிக்கு சென்று, அங்கு நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவது போன்று தத்ரூபமாக செயல்விளக்கம் அளித்தனர்.

1 More update

Related Tags :
Next Story