கொல்லிமலை சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொல்லிமலை சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம்:
கொல்லிமலை பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது. அப்போது மலைக்கு செல்லும் 61-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலையோரம் நின்ற ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





