நல்லம்பள்ளி அருகேமரங்கள் வெட்டி கடத்த முயற்சி


நல்லம்பள்ளி அருகேமரங்கள் வெட்டி கடத்த முயற்சி
x
தினத்தந்தி 26 Aug 2023 7:00 PM GMT (Updated: 26 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தொம்பரகாம்பட்டி பகுதியில் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் சுங்கச்சாவடி நிர்வாகம் மூலம் 3 ராட்சத மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்களை நேற்று காலை மர்மகும்பல் வெட்டி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதி வாகன ஓட்டிகள் சத்தம் போட்டனர்.

இதனால் அந்த கும்பல் வெட்டிய மரங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் மர்மகும்பலால் வெட்டப்பட்ட 3 மரங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story