ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x

ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை

ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்தில் ஏராளமான பயணிகள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் பலியான பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டையில் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story