திருச்சி ஆண்கள் அணி சாம்பியன்


திருச்சி ஆண்கள் அணி சாம்பியன்
x

திருச்சி ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சார்பில் மாநில வலு தூக்கும் போட்டி திருச்சியில் 2 நாட்கள் நடந்தது. இதில் திருச்சி, கரூர், நெல்லை, சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 90 பெண்கள் உள்பட 570 பேர் கலந்து கொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவுகளில் பெஞ்ச் பிரஸ், டெட்லிப்ட் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் திருச்சி அணி அதிக புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவில் நெல்லை அணி முதலிடத்தை தட்டிச்சென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வலு தூக்கும் சங்க மாநில தலைவர் வண்டு ராமச்சந்திரன், மாநில செயலாளர் இளங்கோவன், பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.


Next Story