தள்ளுவண்டி வியாபாரி ஆட்டோ மோதி பலி


தள்ளுவண்டி வியாபாரி ஆட்டோ மோதி பலி
x

தள்ளுவண்டி வியாபாரி ஆட்டோ மோதி பலியானார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

தள்ளுவண்டி வியாபாரி ஆட்டோ மோதி பலியானார்.

கலசபாக்கம் அருகே உள்ள தேவனாம்பட்டு ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் அருகில் உள்ள சிறுகளாம்பாடி பகுதியில் சாலை ஓரம் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்த அவர் நார்த்தாம்பூண்டி கிராமத்தில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில் வண்டியை தள்ளியவாறு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த ஆட்டோ அதிவேகத்தில் வந்து எதிர்பாராத விதமாக கணேசன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கணேசன் மயங்கி கீழே விழுந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது கணேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக கணேசன் மகன் மகேந்திரன், கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story