உடைகல்லுடன் லாரி பறிமுதல்

உடைகல்லுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி பாலமேடு சாலையில் தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் மற்றும் கிராம உதவியாளர்கள் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் உடைகல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அதில் 3 யூனிட் உடைகல் இருந்தது. இது சம்பந்தமாக கிராமநிர்வாக அதிகாரி ஜெயராஜ் கொடுத்து புகாரின்படி வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து உடைகல்லுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





