அனுமதியின்றி உடைகல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


அனுமதியின்றி உடைகல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x

அனுமதியின்றி உடைகல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

விருதுநகர் கனிமம் மற்றும் சுரங்கத்துறை தனித்துணை வட்டாட்சியர் சிவபெருமாள் தலைமையில் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டியில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது குகன்பாறையில் இருந்து உடைகல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மறித்தனர்.

அப்போது டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அனுமதி சீட்டு இல்லாமல் உடைக்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 யூனிட் உடைகல் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story