தூத்துக்குடி அருகே லாரி-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி


தூத்துக்குடி அருகே லாரி-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி
x

விபத்தில் காயமடைந்த 15 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பெண்கள் ஒரு வயது குழந்தை என 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story