சுனாமி நினைவுத்தூணில் கலெக்டர் லலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி

சுனாமி நினைவுத்தூணில் கலெக்டர் லலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தை சுனாமி பேரலைகள் தாக்கியதன் 18-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பூம்புகாரில் உள்ள சுனாமி நினைவுத்தூணில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், காவேரி பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் மதுமிதா ரவி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், உழவன் நண்பர் குழு தலைவர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





