டர்பைன் பழுது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்


டர்பைன் பழுது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்
x

டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டாவது அணு உலையின் டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று காலை 10.45 மணியளவில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை அணுமின் நிலைய விஞ்ஞானிகளும், ஊழியர்களும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் டர்பைனில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவிக்கிறது. தற்போது முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.


Next Story