தூத்துக்குடி அனல்மின்நிலைய குடோனில் காப்பர் பொருட்கள் திருட்டு


தினத்தந்தி 15 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 9:00 AM GMT)

தூத்துக்குடி அனல்மின்நிலைய குடோனில் காப்பர் பொருட்கள் திருடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில், மின்நிலையத்துக்கு தேவையான பொருட்களை வைப்பதற்காக குடோன் உள்ளது. இந்த குடோன் பொறுப்பாளராக சுப்பிரமணியன் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இந்த குடோனில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்து உள்ளார்.

பின்னர் குடோனல் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் நிக்கல் குழாய்கள், காப்பர் நிக்கல் கண்டென்சர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காப்பா் பொருட்களை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story