108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்


108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்
x

108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி ரோஜா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சில் ரோஜாவை ஏற்றிக்கொண்டு, புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நோக்கி அழைத்து சென்றனர்.

ஆம்புலன்சை டிரைவர் பிரபு ஓட்டினார். மருத்துவ உதவியாளர் மணி உடனிருந்தார். அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே பிரசவம் நடந்து, ரோஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகு தாயும், இரட்டை குழந்தைகளும் புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.



Next Story